இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள்.
மஹேசனுக்கே தெரியாத விஷயம்!மக்கட் பிறப்புத் தான். வேறே என்ன? அது மட்டும் மஹேசனுக்கே தெரியாதாமே! ஆச்சரியமா இல்லை? ஆனால் அப்படித்தான் ஒரு பழமொழி எங்க அம்மா சொல்லுவார்கள். "மழை வரவும், மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே தெரியாது" அப்படின்னு. இப்போ மழை நல்லா வெளுத்துக் கட்டுது. ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை வெளுத்துக் கட்டுது. எது தப்பினாலும் இது மட்டும் தப்பாது. காலா காலத்தில் வந்துடும். ஆனால் குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம பூர்வ ஜென்ம புண்ணியம். கல்யாணம் ஆனா உடனேயே எல்லாரும் கேட்கும் கேள்வி விசேஷம் ஏதும் உண்டாங்கறது தான்.
"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக்களஞ்சியமே"ன்னு கொஞ்சவோ அல்லது "சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?"னு கேட்டுக் கொஞ்சவும் எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் எல்லாருக்கும் அது நிறைவேறுதா? இல்லை.
சிலருக்கு நிறைவேறாமல் போகிறது. உடலில் குறைபாடுகள் இல்லாதவர்களுக்குக் கூடக் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி" கூட முயன்றாலும் எல்லாருக்கும் சாத்தியம் ஆவது இல்லை. அதே மாதிரி வாடகைத் தாயும் இப்போ பிரபலம் ஆகி வருகிறது. அதிலேயும் எல்லாருக்கும் பலன் கிடைப்பது இல்லை. உண்மையில் பார்த்தால் இறைவன் விதித்தவருக்குத் தான் கொடுக்கிறான். அதில் மாற்றம் இல்லை இது வரை. கிடைக்கிறவங்களுக்கும் சரியான விதத்தில் குழந்தை பிறக்குதா?
அதுக்கும் சில பிரச்னைகள் இருக்கே? அதிலே ஒண்ணுதான் ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ பார்க்கப் போறோம்.
எனக்குப் படிக்கிற நாளிலேயே என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னுதெரியும். ஆனால் அப்போ அது Rh+ அல்லது - என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னால் சில நிகழ்வுகள் மூலம் Rh- என்றால் குழந்தை பிறப்பில் பிரச்னை என்று தெரிய வந்தாலும் அது எல்லாம் சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக் குழந்தை பெற்றுக் கொண்டவர்களாய்ப் போய் விட்டார்கள். ஆகவே இதில் பெரிய விஷயம் ஏதுவும் இல்லைனு யோசிச்சுப் பார்க்கவே இல்லை.
பின்னால் எனக்குக் கல்யாணம் ஆகி உடனே குழந்தை உண்டாகாதபோதும் இது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அதுக்கு அப்புறம் குழந்தை உண்டாகிக் குழந்தை பிறந்து 3-ம் நாள் குழந்தை மஞ்சள் என்றால் அப்படி ஒரு மஞ்சளாக இருக்கவே எல்லாருக்கும் சந்தேகம் ஏன் இப்படி? என்று. ஆனால் என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை நோய் இருந்த காரணத்தால் வீட்டில் இருந்த பெரியவர்கள் அதன் காரணமாய் இருக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் டாக்டர் வந்து பார்த்து விட்டு நான் Rh-குரூப், அதன் விளைவுதான் என்று உறுதிப் படுத்தினார். ஆனால் அவர் வந்து பார்த்து உறுதிப் படுத்துவதற்குள் குழந்தை பிறந்து 4 நாளுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. ஆகவே எனக்கு அப்போது உடனே போட வேண்டிய ஊசி போடமுடியாத நிலை. குழந்தைக்கு மட்டும் மருத்துவம் செய்தார்கள். தினமும் காலை வெயிலில் குழந்தையைப் போட்டுக் கொண்டு என் அம்மா உட்காருவார்கள். நான் எங்கேயோ ரூமில் இருப்பேன். குழந்தையின்ஆகாரத்தில் இருந்து அது குளிப்பது வரை எல்லாம் கட்டுப் பாடு. கிட்டத் தட்ட 45 நாள் இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு மாதிரியாக நானும் புக்ககம் வந்து விட்டேன். அப்புறம் எல்லாம் மறந்தும் போச்சு.
அதுக்கு அப்புறம் சில வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை உண்டான சமயம் நாங்கள் ராஜஸ்தானில் இருந்த காரணத்தால் என் கணவர் முன்கூட்டியே என் பெற்றோரை வரவழைத்து என்னை அனுப்பி விட்டார். இஷ்டம் இல்லாமல்தான் போனேன் அப்போது, குழந்தை பிறந்த சமயம் விடிகாலை ஆதலால் அப்போது ஒண்ணும் தெரியவில்லை. அப்புறம் நல்ல சூரிய வெளிச்சம் வந்ததும் குழந்தையைப் பார்த்தால் ஒரே மஞ்சள் நிறம். துணி எல்லாம் மஞ்சள். உடனேயே எனக்குள் ட்யூப் லைட் எரிய நான் முதல் குழந்தைக்கும் வந்திருந்தது என்று சொன்னேன். நல்லவேளையாகக் குடும்ப டாக்டர் என்பதால் முதல் பிரசவமும் அதே ஆஸ்பத்திரி, அவங்களுக்கும் நினைவு இருந்தது. உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து விட்டு முன்னால் வந்த அதே குழந்தை நல சிறப்பு மருத்துவரை வரவழைத்தனர். அவர் பார்த்து விட்டு உடனேயே பழைய கதையும் தெரிந்ததும் இது Rh- விளைவுதான் என்று சொன்னார். உடனேயே முதல் பிரசவத்தில் ஊசி ஏன் போடவில்லை என்று கேட்டதற்குக் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்கு மேல் ஆனதால் போட்டாலும் பயன் இல்லை என்று போடவில்லை என்று சொன்னார்கள். மஞ்சள் காமாலையுடன் பெரிதுபட்ட கல்லீரலுடன் (enlarged liver) பிறந்த என் குழந்தை அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு காட்சிப் பொருள் ஆனான். இதன் காரணம் என்னோட 'O' Rh Negative வகை ரத்தம் தான். இது ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை என்றாலும் இதைத் தடுக்க நிறையத் தற்காப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை நாளை தொடரும்.
DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு. ஆனால் நான் பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி வேறு மருத்துவ சம்மந்தமான குறிப்புக்கள் எல்லாம் வராது என்றும் சொல்லி இருக்கிறேன். ஆகவே இந்த ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்கள் மட்டுமே நாளை கொடுக்கப் படும்.
டாக்டர்கள் என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் சிபாரிசு செய்வார்கள், நாம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.
Wednesday, November 08, 2006
Friday, November 03, 2006
விமானம் ரிவர்ஸில் போகுமா?
நம்ம கடல் கணேசன் பதிவுல ஒரு அனானி கப்பலில் ரிவர்ஸ் கியர் உண்டான்னு கேட்டு இருந்தார். அப்படியே விமானங்களிலும் உண்டான்னு கேட்டுட்டு, இந்த கேள்வியை விக்கி பசங்க கிட்ட கேட்கலாமான்னு வேற கேட்டு இருந்தார். ரிவர்ஸ் கியர், Rivers கியர் இல்லை அப்படின்னு ஜோக் எல்லாம் கூட அடிச்சிருந்தார். இப்படி எல்லாம் அமர்க்களமா கேள்வி கேட்கற பார்ட்டிங்க பேரைச் சொன்னா தொடர்ந்து எழுதும் போது உங்களுக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும் இல்லையா? கணேசனும் அவரு கிட்ட கேட்கலாமுன்னு சொன்னாரே தவிர நம்ம கிட்ட கேள்வியை கேட்கவே இல்லை.சரி விடுங்க.
யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியதை கடமையாய் கொண்டிருக்கும் நாங்கள் இப்படி ஒரு நல்ல கேள்வி வந்திருக்கும்போது பதில் சொல்லாம விடுவோமா? முதலில் ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம்.
விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது.
இப்பொழுது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.
இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.
இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.
பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?
இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.
இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.
என்ன அனானி அவர்களே, பதில் புரிந்ததா?
யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியதை கடமையாய் கொண்டிருக்கும் நாங்கள் இப்படி ஒரு நல்ல கேள்வி வந்திருக்கும்போது பதில் சொல்லாம விடுவோமா? முதலில் ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம்.
விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது.
இப்பொழுது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.
இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.
இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.
பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?
இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.
இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.
என்ன அனானி அவர்களே, பதில் புரிந்ததா?
Thursday, November 02, 2006
சுடோகு போடுவது எப்படி?
அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.
சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.
9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.

விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.
ஒரு புதிர்

இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.

அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.

இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.

இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.

இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.

இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.
சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.
- இலவசக்கொத்தனார்
சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.
9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.

விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.
ஒரு புதிர்

இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.

அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.

இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.

இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.

இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.

இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.
சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.
- இலவசக்கொத்தனார்
Subscribe to:
Posts (Atom)