Tuesday, April 03, 2007

Fits, Seizures and Epilepsy

இதப் பத்தி இராதா ஸ்ரீராம் கேட்டிருந்தாங்க. இதெல்லாம் ஒரே வியாதியின் பல்வேறு பெயர்களான்னு. அத முதல்ல க்ளியர் பண்ணிடுவோம்.

1. Seizure is a convulsion or transient [temporary] abnormal event resulting from paroxysmal [non predictable, sudden] discharge of cortical neurones.

2. Epilepsy is the continuing tendency to have such seizures, even if a long interval separates these attacks.

சரியா? Now, Fits is the colloquial term for seizures.

தமிழ்ல காக்காவலிப்புன்னு பொதுவா சொல்வாங்க. எனக்கு அதத்தவிர தமிழ்ல வேற வார்த்தை தெரியாததால வலிப்புனு பொதுவா seizuresஐயும், வலிப்புநோய்னு Epilepsyஐயும், சில சமயங்கள்ல டெக்னிக்கலா ஆங்கிலத்துலயும் சொல்லிடறேன்.

ஸ்டாடிஸ்டிக்ஸ் படி உலகத்துல இருநூறு பேருல ஒருத்தருக்கு வாழ்க்கையில ஒருதடவையாவது இந்த வலிப்புநோய் வரலாம். இந்தியாவ பொருத்தவரைக்கும் epidemiological ஆய்வுகள் வேறுபடுகின்றன. ஆனால் ஆயிரத்தில் 6 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் இந்தியாவில் வலிப்பு வருகின்றது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. active வலிப்புநோய் இருப்பவர்கள் சதவிகிதம் 0.5%. அதாவது, இரண்டாயிரத்தில் ஒருவருக்கு. incidence: தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் ஐம்பத்திஐந்து லட்சம் பேருக்கு நோய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் சுமார் நாற்பதுலட்சம் நோயாளிகள் கிராமப்புறங்களில் இருப்பவர்கள். (கிராமம் நகரம் பிரச்சனைக்கு அப்புறம் வருவோம்) ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்துலட்சம் புதிய வலிப்புநோயாளிகள் உண்டாகின்றனர். இதன்மூலம் பரவலான நோய்/உபாதை என்று தெளிவாகும்.

ஏன் வருது என்பது சிக்கலான நியுராலஜிக்கல் கேள்வி. எளிமையாச் சொல்லணும்னா நம் மூளையின் திசுக்களில் abnormal electric activity - Large groups of neurones fire uninhibitedly, hypersynchronously and repetitively: Resulting in 'characteristic' Spike Wave EEG.

ஏன் இந்த மாதிரி வழமைக்கு மாறான எலெக்ட்ரிக் மாற்றங்கள்னா காரணங்களா

1) மரபணுவின் மூலம் அதிக ரிஸ்க் இருக்கலாம். சுமார் 30% நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயுற்ற நெருங்கிய குடும்பத்தினர் இருப்பார்கள்.

2) Trauma, Hypoxia (தேவையான அளவைவிட ஆக்ஸிஜன் அளவு குறைவாய்கிடைக்கும் நிலை) மற்றும் சிலவகை நரம்பியல் அறுவை சிகிச்சைகள்.

3) ஜுரம்: ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளில் கவனிக்கவேண்டிய விஷயம் இந்த ஜுரம். சாதாரண காய்ச்சல் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இவை வலிப்புநோயாய் மாறாவிட்டாலும் இந்த febrile convulsionsக்கு வராமல் தடுப்பது அவசியம்.

4) மூளையில் ஏற்படும் கட்டிகள் (புற்றுநோய்/மற்றவை)

5) மூளையின் இரத்தஓட்டம் தடைபடும் போது வரலாம். மூளையில் வயதாவதால் ஏற்படும் ரசாயன/கூறு (structural) மாற்றங்கள், உதாரணம்: Alzheimer's Disease. இதனாலேயே வயதானவர்களுக்கு வலிப்புநோய் பெரும்பாலும் வருகிறது.

6) மது/மருந்துகள் மற்றும் சிலவகை போதை வஸ்துகள்

7) Encephalitis, Tuberculosis போன்றவற்றினாலும் வரலாம். இதைத்தவிர முட்டை மற்றும் இறைச்சி உணவு வகைகள் சரியாக சமைக்காமல் அதனால் பரவும் Tapeworm போன்றவற்றாலும் வரலாம்.

8) அதிக ரிஸ்க் குரூப்பில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான strobe lightகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்னும் சிலநேரங்களில் தூக்கமின்மை கூட வலிப்பு உண்டாக காரணங்களாக இருக்கலாம்.

வலிப்பு (seizures) சில உட்பிரிவுகள்: ரொம்ப விரிவாக இவற்றை விரிவாகச் சொல்வது வாசகர்களுக்கு அவசியமற்றது என்று நினைக்கிறேன். (அவ்ளோதான் தெரியும்னு யார்பா சவுண்ட் கொடுக்குறது? :))

1. Generalized
மூளையின் இருபாகங்களிலும் மின் மாற்றங்கள் ஏற்படுவதால் உடலின் இலது மற்றும் வலது பாகங்களிலும் abnormal movements. நோயாளிக்கு நினைவு தப்பிவிடும். வயதில் சிறியவர்களையே இந்த வகை வலிப்பு தாக்கும் பெரும்பாலும்.
a) Tonic Clonic Seizures
வலிப்பு என்பதின் டெபனிஷன் பலருக்கு இதுதான். Tonic நிலையின் போது உடம்பு rigid ஆகி நோயாளிகள் கிழே விழுவர் (இதன்மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்). Stiffening of Limbs (increased tonus of muscles => tonic part of the name). மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் incontinence ஏற்படலாம். நாக்கை கடித்துக்கொள்வார்கள். அதிகபட்சமாக ஒருநிமிடம் நீடிக்கலாம் இந்நிலை.

அடுத்த Clonic நிலையில் repeated rhythmic jerking movements of muscles மற்றும் வாயில் நுரை தள்ளுதல் நிகழும். இது சில நொடிகளிலிருந்து சில நிமிடங்கள் நீடிக்கலாம்.

பொதுவாகவே வலிப்பு என்பது self limiting. அதாவது தானாகவே அடங்கிவிடும். அடங்கியபின்னர் நோயாளி தூக்ககலக்கதிலேயோ, குழப்பநிலையிலோ கோமாவிலோ பலமணிநேரங்கள் நீடிக்கலாம். அதன்பின்னர் நோயாளி இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். இதற்கு absence seizure "Post ictal state" என்று பெயர்.

b) "Absence[Petit mal] attacks or seizures" என்பது தசைகளின் திமிரில்[tone] அதிக பாதிப்பில்லாமல், ஒரு சில நொடிகள் மட்டுமே,[10-30 sec] கண்துடித்தல், கை, கால்கள் துடித்தல் போன்றவற்றுடன் நிகழ்ந்து, அந்த நொடிகளில் மட்டும் நினைவு தப்புவதும் நடக்கும் ஒரு வகை வலிப்பு நோய்.
தான் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, இது கழிந்ததும் மீண்டும் தொடங்க ஆரம்பிப்பார். (Thanks to Dr. VSK)

இதைத்தவிர இப்பிரிவினுள் myoclonic (வெறும் தசைகளில் jerk movements), tonic (jerking இல்லாமல் வெறும் rigid ஆவது மட்டும்) மற்றும் atonic வகைகளும் உண்டு.

2. Partial Seizures
இவை பெரும்பாலும் முதியவர்களுக்கு வருவது. அதனாலேயே இதன்பின்னால் வேறு ஏதும் underlying நோய் இருக்கிறதா என்று follow up செய்யவேண்டியது அவசியமாகிறது.

இவ்வகை வலிப்பின் hallmark ஒருமாதிரியான விநோதமான feeling. அது பொதுவாக வயிற்றுப்பிரட்டல், தலைசுற்றல் போன்றவாகவும் இருக்கலாம். இல்லை சிலசமயங்களில் hallucinations எனப்படும் imaginary auditory (கேட்பதில்), olfactory (விநோதமான மணங்கள்) and visual imaginations such as flashing lights அல்லது deja vu (புதிய இடம் பழகியதாக தோன்றுவது) ஆகவும் இருக்கலாம். இந்த பீலிங் வலிப்பு வருவதற்குமுன் அறிகுறியாக ஓரிரு நாட்கள் முன்னர்கூட வரலாம். திடீரென mood மாற்றங்களும் இதில் அடக்கம். ஆங்கிலத்தில் "Aura" என்பார்கள். ஒரு vague ஆன term இது. focal ஆக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாதிக்கபடுவதால் ஏற்படும் ரசாயன/கூறு மாற்றங்களால் வருவது இந்த அவ்ரா. இந்த அவ்ரா என்பது வலிப்பு அல்ல. ஆனால் வலிப்பு வருவதற்கான அறிகுறி.

இதில் Jacksonian மற்றும் Temporal Lobe seizures என சில உட்பிரிவுகள் உண்டு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது இந்த அவுரா மற்றும் மூளையின் எந்தப்பகுதி பாதிக்கபடுகிறதோ அந்த பகுதியின் corresponding function அபரிமிதமாகவோ குறைந்தோ காணப்படலாம்.

இப்போது ஒருவருக்கு வலிப்பு தாக்கினால் வலிப்பை பார்த்தவுடன் ஒருமாதிரி கண்டுகொள்வீர்கள் அல்லவா?

சரி தெருவில் போகிறோம். ஒருவருக்கு வலிப்பு தாக்குகிறது. என்ன செய்யலாம்?

principle ஒன்றுமே செய்யாமலிருப்பது நலம். நினைவில் கொள்ளுங்கள் வலிப்புகள் பெரும்பாலும் தானாகவே சில நிமிடங்களில் அடங்கிவிடும். அதற்குள் செய்யவேண்டியது

1. முடிந்தால் நோயாளியின் airways ப்ளாக் ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பல்செட் உள்ளவரென்றால் அதை கழட்டவேண்டும். அடுத்தது சுற்றி கூட்டம் போட்டு வேடிக்கை போடுவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு காற்றோட்டமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.

2. சிலநிமிடங்களுக்குள் தானாகவே வலிப்பு அடங்கிவிடும். அதற்குள் முடிந்தால் நோயாளியை இடதுபக்கத்தில் படுக்குமாறு திருப்புங்கள். நோயாளி ஜெர்க் ஆகாமல் இருக்க சப்போர்ட் கொடுப்பது, கைகால்களை இழுத்துப்பிடிப்பது, கட்டிப்போடுவது போன்றவை மிக மிக ஆபத்தானது.

அப்புறம் முக்கியமாக சாவி கொடுப்பது, இரும்பு மற்றும் உலோகப்பொருட்களை கையில் திணிப்பது என்று வழக்கம்போல் தமிழ்சினிமா சொல்லிக்கொடுக்கும் மருத்துவத்தை சற்றே கஷ்டப்பட்டு மறந்துவிடுங்கள்.

இந்தியாவில் பல பொதுமக்கள் அதீத ஆர்வத்தால் உதவியென்ற பெயரால் உபத்திரவம் செய்வர். மந்திரம் சொல்வது : அதுவேனால் சொல்லிக்கொள்ளட்டும். மற்றபடி தாயத்துகட்டுவது, டாலர் கட்டுவது, அரனாக்கொடிகட்டுவது என பல தவறான எம்ர்ஜென்ஸி டெக்னிக்ஸ் வழக்கத்தில் உண்டு. இதனால் எல்லாம் ஒரு எள்ளளவு பயன்கூட இருப்பதாக நிருபிக்கபடவில்லை. சொல்லப்போனால் வலிப்பின் போது ஏற்படும் repeated jerking அசைவுகளால் நோயாளிக்கு நிரந்தரமான வேறு ஏதாவது படுகாயங்களை எவ்விதமான hard/sharp/blunt பொருட்களும் ஏற்படுத்த வாய்ப்பு நிறைய உண்டு.

வலிப்பு 95% தானாகவே சிலநிமிடங்களில் நின்றுவிடும். எனினும் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டியது அவசியம். இருபது நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடருமானால் நிரந்தரமான வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ உதவி அத்தியாவசியமாகிறது. அதற்குண்டான first aidகள் emergency paramedicசோ, மருத்துவமனையோ மட்டுமே செய்யமுடியும்.

மேலும் ஒரு வலிப்பிற்கு பின் முழுமையான நினைவுக்கு திரும்பாமல் நோயாளிக்கு மீண்டும் ஒரு வலிப்பு அட்டாக் வருமானால் அதன் பெயர் Status Epilepticus. இது ஒரு Life threatening medical emergency. வீட்டில் எவருக்கேனும் ஏற்பட்டால் உடனடியாக Intravenous ஆக 10மில்லிகிராம் Diazepam கொடுக்கலாம். இரத்தத்தில் ஏற்றமுடியவில்லையெனில் ஆசனவாய் வழியே செலுத்தக்கூடிய விதத்தில் கிடைக்கும் அதே Diazepam மற்றும் Paraldehyde பயன்படுத்தலாம். சாதாரணர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நோய் உள்ளவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு உங்கள் மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அதனால் இதற்குள் அதிகம் நாம் போகத்தேவையில்லை. ஆனால் சிகிச்சை முறைகள் நீண்ட நாட்களுக்கு பின்பற்றபடவேண்டியவை. நம்மூரில் இருக்கும் பழக்கம், ஜுரம் குறைஞ்சால் மாத்திரையை நிறுத்து என்று எடுத்தேன் கவிழ்த்தேன் மனோபாவம் இந்நோயிலும், மற்ற பல நோய்களைப் போலவே மிகவும் ஆபத்தில் கொண்டுவிடலாம்.

தனியாக, வலிப்புநோயினால் பெண்களுக்கு தொல்லை அதிகம். குழந்தை பெறுவதில் மற்றும் அதன்சார்ந்தவை என கூடுதல் சிரமங்கள். சமூக காரணிகளால் திருமணமும் தடைபட வாய்ப்புண்டு. முற்சொன்னவற்றிற்கு குடும்ப மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. இக்கால மருத்துவத்தில் வலிப்பு நோயாளிகள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைச்செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சையை முறையாய் பின்பற்றினால் இயல்பு வாழ்க்கை வாழலாம்.

சமூக பிரச்சனைகள்: வலிப்புநோய் உள்ளவர்களுக்கு வண்டிவாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தொடங்கி ஆயுள் காப்பீடு செய்ய, ஏன் வேலைவாய்ப்புகளில் கூட சிக்கல்கள் உண்டு. தற்போதைய மருத்துவத்தின்படி ஓட்டுநர் உரிமம் ஒருவருடமாக வலிப்பு இல்லாதவருக்கு வழங்கப்படலாம். ஆனாலும் குளியலறை தாளிட்டுக்கொள்வது, தனியாக நீச்சலடிப்பது மற்றும் இதர ஆபத்தான வேலைசூழல்களை தவிர்க்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவற்றிற்கு பெரும்பாலும் சமூகத்தில் நிலவும் தவறான இந்நோய் குறித்த பயமே காரணம். இது மனநோயல்ல. Epilepsy is not a mental disorder; Its a Neurological Disorder. அதாவது வயிற்றிலுள்ள அமிலசுரப்பிகள் அதிகம் வேலைசெய்தால் அல்சர் வருவதைப் போல மூளையின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம். இந்நோயாளிகளை அணுகும்போது நாம் அதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நிலையிலே அணுகவேண்டியதன் அவசியத்தை நம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரப்பவேண்டியது நம் கடமை.

ஒரே ஒரு அதிர்ச்சிதரும் புள்ளிவிவரத்துடன் முடிக்கவிரும்புகிறேன். நம் இந்தியாவில் நம்மில் மூன்றில் ஒருவர் இந்த வலிப்புநோய் என்பது ஒரு மனநோய் என்றோ/பேய் பிசாசுகளால் ஏற்படும் சூனியம் என்பது மாதிரியான தவறான கருத்துகளை கொண்டுள்ளோம். மேலும் முன்னாடி சொன்னா மாதிரி கிராமங்களில் இன்னும் அதிகமாக, இத்தகைய மூடப்பழக்கவழக்கங்களால், தவறான புரிந்துகொள்ளல்களால் சுமார் 75% வரை நோயாளிகள் மருத்துவ உதவியை முற்றிலுமாக நாடுவதில்லை. நாட்டுவைத்தியம், பில்லி சூனியம் என்று அவசியமான மருத்துவசிகிச்சையை தள்ளிப்போடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். மாறப்போவது இந்நோய் குறித்த விழிப்புணர்ச்சியை நமக்கு தெரிந்தவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும்.

மேலதிக விவரங்களுக்கு:
Epidemiology in India

Epilepsy in India

National Institute of Neurological Disorders and Stroke

15 comments:

said...

டாக்ஸ், ரொம்பவே பெரிசா இருக்கு, பொறுமையா படிச்சா தான் இது விளங்கும் போல இருக்கு. பொறுமையா படிச்சுட்டு வரேன்.

said...

குழந்தைகளுக்கு ஜுரம் ஒரு அறிகுறின்னு சொல்லி இருக்கீங்க. இது பல வியாதிகளுக்கு அறிகுறியா இருக்கே. ஜுரம் வந்தாலே மருத்துவரிடம்தான் செல்ல வேண்டுமா? அல்லது அதனுடன் வேறு சில அறிகுறிகளும் இருக்குமா?

said...

நல்ல உபயோகமான பதிவு...

கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்

இவர்கள் பிற்காலத்தில் க்லெப்டோமேனியாக் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.. நானே இரண்டு பேரை இது போல பார்த்து இருக்குறேன்...

நல்ல பதிவிற்கு நன்றி

said...

விபரமான பதிவு. நன்றி.
.....
அண்மையில் இங்கு (ஒன்ராறியோவில்) சப்வேயில் இது குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு ஆர்வத்தின் நிமித்தம் அவர்களின் இணையதளத்தை (http://www.epilepsyontario.org) சில வாரங்களுக்கு முன் குடைந்துகொண்டிருந்தேன். ஆனால் விரிவாக விளஙக்கூடிய தமிழில் இங்குநீங்கள் பதிந்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Epliepsy, is not a disase; It is a neurological disorder என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய விடயம்.

said...

விவரமான தகவல்கள் அடங்கிய பதிவு.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஒரு திருத்தம்.

//தானாகவே அடங்கிவிடும். அடங்கியபின்னர் நோயாளி தூக்ககலக்கதிலேயோ, குழப்பநிலையிலோ கோமாவிலோ பலமணிநேரங்கள் நீடிக்கலாம். அதன்பின்னர் நோயாளி இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். இதற்கு absence seizure என்று பெயர்.//

"Post ictal state" என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.

"Absence[Petit mal] attacks or seizyres" என்பது தசைகளின் திமிரில்[tone] அதிக பாதிப்பில்லாமல், ஒரு சில நொடிகள் மட்டுமே,[10-30 sec] கண்துடித்தல், கை, கால்கள் துடித்தல் போன்றவற்றுடன் நிகழ்ந்து, அந்த நொடிகளில் மட்டும் நினைவு தப்புவதும் நடக்கும் ஒரு வகை வலிப்பு நோய்.
தான் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, இது கழிந்ததும் மீண்டும் தொடங்க ஆரம்பிப்பார்.
===========

மேலும், மங்கை அவர்களுக்கு ஒரு விளக்கம்.
டெம்பொரல் லோப் பாதிப்பினால் வலிப்பு நோய் வருபவர்களுக்கு மட்டுமே, மனநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறது. இதில், நீங்கள் சொன்ன க்ளெப்டோமேனியாக்கும் அடங்கும்.

ஆனால், க்ளெப்டோமேனியாக் எவருக்கு வேண்டுமானாலும் வரலாம்.... வலிப்பு நோய் இல்லாதவர்களுக்கும் கூட!

முறையான சோதனைகள்[EEG] செய்து கொண்டு, தொடர்ந்து, தொய்வில்லாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, சில விஷயங்களைத் தவிர்த்து, அல்லது குறைத்து, முறையான வாழ்க்கை நடத்தினால், இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

நன்றி.

said...

புலி,
பெருசா இருக்கறதா பிச்சிருக்கலாம்னு சொல்றீயா? ஹூம்... சரி மெதுவா படிச்சுட்டு வாங்க.

கொத்ஸ்,
குழந்தைகளுக்கு ஜுரம் சீரியஸானதுதான். இங்க சொல்லவந்தது அவ்ளோ க்ளியரா இல்லேன்னு நினைக்கிறென். இங்க ஜுரம் can bring about febrile convulsions. என்ன மாதிரி ஜுரம்கறது மேட்டர் இல்ல.

மங்கை,
நன்றி.

நான் சொல்வதற்குள் வீஎஸ்கே சொல்லிவிட்டார். டெக்னிக்கலா க்ளெப்டோமேனியா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அப்புறம் இந்த post/peri ictal depression/mania & associated stuff வெல்லாம் தனி டாபிக். :)) எனக்குத் தெரிந்தவரையில் post ictal mania தனியே குறிப்பிட்டுச்சொல்லுமளவிற்கு இந்நோயாளிகளை தாக்குவதில்லை.


நன்றி டிசே தமிழன்

வீஎஸ்கே,
வலிப்புநோய்களின் பிரிவுகள் சரியாக புரியவில்லை என்று கொத்தனார் மதியமே சொன்னார். க்ளீனிங் அப் செய்யவேண்டும். அவசரத்தில் பதிந்ததில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை.

post-ictal state என்றுதான் இருந்திருக்கவேண்டும்.

absence seizure பற்றி எழுதாமல் பேரை மட்டும் மாற்றிப்போட்டிருக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

said...

நல்ல விரிவான பதிவு ராம்ஸ்.

சாவி கொடுப்பது தவறு, நாக்கைக் கடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பவை மட்டும்தான் எனக்கு முன்பே தெரியும்.. பல விஷயங்கள் புதியவை.

கொத்ஸோட கேள்வி எனக்கும் இருக்கு. ஜுரம்னாலே பயப்படணுமா? அல்லது 3 நாள் விடாத ஜுரம், 102க்கு மேலே, உப உபாதைகள்னு எதாச்சும் அதர் இண்டிகேட்டர்ஸ் இருக்கான்றத பின்னூட்டமா சொல்லிட்டா புண்ணியமா போகும்.

said...

இப்பதான் படிச்சு முடிச்சேன். விரிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நிறைய தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

said...

மிகவும் தேவைப்படும் நேரத்தில் கிடைத்த பதிவு... என் நண்பருக்கு.
சுட்டியை அனுப்பியுள்ளேன்.

said...

நண்பர் இரவி தனிமடலில்..

பயனுள்ள பதிவு. நன்றி.

said...

இது பற்றி இன்றைய சி.என்.என்னில் வந்திருக்கும் ஒரு செய்திக் குறிப்பு .

said...

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ள பதிவு. அதனால் ஒரு பி.க.

said...

இராமநாதன்,
நல்ல பதிவு. தொடர்ந்தும் இப்படியான பதிவுகளைத் தாருங்கள்.

said...

நல்ல தகவல்கள் இராமநாதன்.
"எதுவும் செய்யாது இருப்பதே நலம்" என்று சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும். வாயில் நுரை தள்ளினாலே பயந்து போய் நம்ம ஆட்கள் என்னென்னவோ செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

//தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைச்செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சையை முறையாய் பின்பற்றினால் இயல்பு வாழ்க்கை வாழலாம்//

நம்பிக்கை தரக்கூடிய வாசகங்கள்!

said...

Uncle please check http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html

we request you to give this article as a PPT or Word document so that we could reach it to 3500 school/college students who do not access Internet.

Please check www.focpune.blogspot.com & www.vidyaposhak.org