Thursday, February 01, 2007

புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?

பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கும் எரி பொருள் கனிமங்கள், அதாவது ஆங்கிலத்தில அதை 'fossil fuel'ன்னு சொல்வாங்க! அதை பத்தி என்னா விவரமுன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு!இந்த எரிபொருள்கள் கண்டுபிடிச்ச பின்ன தான் மனிதனோட வாழ்க்கையே மேம்பட்டுச்சு, எப்படின்னு கேட்கிறீங்களா, அதாவது என் எஸ் கலைவானர் அந்த காலத்திலே 'பட்டனை தட்டிவிட்டா இரண்டு இட்லி தட்டுல வந்திடணும்'னு படிச்ச பாட்டெல்லாம் எதுக்கு? நாம் இல்லானேலும் பரவாயில்லை நமக்கு பின்னாடி வரும் மனித குலம் வசதிகளோட அத்தனையும் அனுபவிச்சு வாழணும்னு அப்பவே எழுதி சொல்லி வச்ச ஞானத்துக்கு மூலமா இருந்தது இந்த எரி பொருள்கள் தான் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும்!

அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியிலே நீராவிக்கு பெரும் பங்கு இருந்தது, ஏன்னா அப்ப இந்த புதையுண்ட எரி பொருள்'ங்கிர சமாச்சாரம் அவ்வளவா கண்டுபிடிக்கல்ல. அதாவது அப்ப மனிதனிடம் இருந்த சக்திகள் விட அதிகமான சக்திகளை கொண்ட குதிரைகளை மனிதன் வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினான், அதுக்கு முன்னே 'நடராஜா சர்வீஸ்' தான். அப்படி தன்னை சுத்தியுள்ளவைகளிலிருந்து எவ்வளவு தனக்கு உபயோகமா பெறமுடியுமோ அத்தனையும் பெற்றான். ஆனா அப்ப சக்திசாலி மிருகங்கள் அவனுக்கு துணையா இருந்தது! அப்பறம் இயந்திர சக்திகளை பயன் படுத்த ஆரம்பிச்சப்ப நீராவி பெறும் துணையா இருந்தது! அப்பதான் மிருகங்கள் கிட்ட இருந்து கிடைக்கும் சக்தி இயந்திரங்களிலிருந்து பெற்றாலும் அவனுக்கு ஏற்கனவே பழகிய குதிரைகளின் சக்தி அளவு தெரிஞ்சதாலே, இயந்திர சக்திகளுக்கும் அவன் குதிரையின் சக்தி அளவை கொண்டே கணக்கிட்டான். அப்படி கணக்கிட்ட பழக்கம் இன்னைக்கும் நம்மகிட்ட இருந்து போகல்லை, ஆமா சின்னதா எலெக்ட்ரிக் மோட்டார் அளவா இருந்தாலும், இல்லை பெரிய காரோட சக்தியையும் இன்னைக்கும் அந்த குதிரை சக்தியாலே தான் அளவிடுகிறோம். ஆமா கால் எச்பி, இல்லை அரை எச்பி, ஒரு எச்பி, நூறு எச்பின்னு இப்பையும் கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கோம்! 'எச் பி' ங்கிறது ஆங்கிலத்திலே 'Horse Power' (HP) அதாவது ஒரு குதிரை சக்தி, எவ்வளவு வேகமா மணிக்கு இத்தனை மைல் ஓடும் பொழுது உண்டாகும் வேகம், அதன் அளவீடு! இதை புரிஞ்சிக்கனும்னா உங்களுக்கு கொஞ்சம் பொளதீகம் தெரிஞ்சிருக்கனும்! என்ன தான் இந்த விஞ்ஞான கோட்பாடுகளை கொண்டு வெவ்வேற அளவீடுகள் அதற்கப்பறம் வந்தாலும், இன்னும் குதிரை சக்தியை நம்ம விட்டபாடு இல்லை!


இந்த புதையுண்ட எரிபொருள், அதாவது, 'fossil ங்கிறது என்னான்னா, பூமிக்கடியிலே கிடைக்கும் நீரகக்கரியினை(Hydrocarbon) குறிப்பிடுவதே , அதாவது முக்கியமா நிலக்கரி (Coal), கச்சா எண்ணைய்(fuel oil) மற்றும் இயல்பு வாயு(Natural Gas) என அழைக்கப்படும் இந்த பூமியில் புதையுண்ட வளமங்களை தான் குறிப்புடுவது!இந்த வளமங்கள் பூமிக்கடியில் எப்படி தோன்றிச்சினா பல வருடங்களுக்கு முன்னால் செத்து மடிந்த பிராணிகள், அழிந்த காடுகள், மரங்கள் அனைத்தும் பூமியின் கீழே மட்கி மருகி இந்த கனிம வளங்களா இருக்குது! அது பூமியின் சில இடங்கள்ல சுலபமா சில அடிகளுக்குள்ள தோண்டுனாலே கிடைச்சிடும், சில இடங்கள்ல ரொம்ப ஆழமா தோண்டி எடுக்க வேண்டிருக்கும்! அப்படி சுலபமா சில அடிகள் தோண்டினாலே கிடைப்பது நமது வளைகுடா நாடுகள் பகுதியிலே, ஆனா சில ஆழ்கடல் குள்ளே தோண்டி எடுத்தால் தான் உண்டு! நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் அப்படி நமது கரையை ஒட்டி இருக்கும் பம்பாய் பகுதிகளிலிருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படுது! அந்த எண்ணை கிணறுகள் இருக்கும் பகுதிக்கு பேரு 'Bombay High'ன்னு! இதை ஏன் 'Bombay High'ன்னு சொல்றாங்கன்னா, மேற்கில்ல இருக்கும் அரபிக்கடலின் பகுதி பம்பாய் கடற்கரையிலேருந்து அப்படியே சரிவா ஒரு 25 கிமீ தூரத்துக்கு கடல் ஆழம் போய்கிட்டிருக்கும் அப்படி 25, 30 கிமீ தூரத்திற்கப்பறம் தான் ஆழ்கடல், அதாவது 175 மீ ஆழம் கொண்ட பகுதிகள் தான் அவை, அங்க தோண்டி எடுக்கப்பட்ட கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் நம் நாட்டின் தேவையை ஒரு 30 சதவீதம் தான் பூர்த்தி பண்ணுது, மீதி இன்னும் சில இடங்கள்லயும் அப்பறம் வெளி நாட்டிலேருந்தும் இறக்குமதி செய்றாங்க!

இப்படி தோண்டி எடுக்கப்படும் கனிமங்கள்ல முக்கியமா உங்களுக்கு நிலக்கரியை பத்தி தெரிஞ்சிருக்கும், அதை எரிச்சு, பெரிய நீர் உலைகள்ல கொதிக்க வைச்சு, அதிலிருந்து உண்டாகும் நீராவியின் சக்தி கொண்டு பெரிய ராட்சத சக்கரங்களை சுழற்றி அதோட இணைக்கப்பட்ட மின் உறபத்தி இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறாங்க! ஆக நம்ம ஊட்டுக்கு, வெயில்ல சுத்திட்டு உஸ் புஸ்னு வீடு திரும்புனோன்ன வந்த வுடனே பட்டனை தட்டி மின்விசிறியை சுழல வைக்க தேவையான மின்சாரத்தை இப்படி தான் தயாரிக்கிறாங்க! இது நிலக்கரியால் இயங்கும் மின் நிலையங்கள், சில மின் நிலையங்கள் பூமியிலிருந்து எடுக்கபட்ட எண்ணையிலிருந்து சுத்திரிகப்பட்ட எரி எண்ணையை கொண்டு எரிச்சு அதே நீர் உலை, நீராவி, சுழலும் இயந்திரம் அப்படின்னு இன்னுரு வகையிலே மின்சாரம் தயாரிக்கிறது, அப்பறம் நான் மேலே சொன்ன இயல்பு வாயுக்கள்ல இருக்கும் எரிக்கும் சக்தியாலே சுழலும் இயந்திரத்தை சுத்த வச்சு மின்சாரம் தயாரிக்கிறது. ஆக இப்படி இந்த புதையுண்ட பொருளை கொண்டு தயாரிக்கும் மின்சாரமொரு வகைன்னா, அணுவை பிளந்து அதில் வரும் சக்தியிலே நீராவி உண்டு பண்ணி மின்சாரம் தயாரிக்கிறது இன்னொரு வகை! ஆக முதோ வகையில உண்டாகிற மின்சாரம் இந்த 'fossil fuel' கொண்டு உற்பத்தி பண்றது, அடுத்த வகை நான் சொன்ன அணு சக்தி மட்டுமில்லாம, காற்றாடி, சூரியஒளி, கடல் அலை அப்படின்னு மற்ற சக்திகளிலிருந்து உருவாக்கும் மின்சாராம், அதை ஆங்கிலத்திலே 'Non fossil fuel based' ன்னோ, இல்லை 'non Conventional energy resources'ன்னோ சொல்லுவாங்க!

ஆக இப்படி தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருள் கனிமங்களைத்தான், நம்முடய சக்தியின் தேவைகளுக்கு உபயோகபடுத்துகிறோம். அந்த சக்தி பல ரூபங்கள்ல நமக்கு உதவுது, அதிலே ஒன்னு தான் வாகன ஊர்திகளுக்கு தேவையான் ஒன்னு! நான் சொன்ன மாதிரி முதல்ல நிலக்கரியில நீராவியை கொதிக்க வச்சு நீராவி இயந்திரத்திலே ஓடின வண்டிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இப்ப எண்ணெய்னு சொல்லக்கூடிய டீசல் எரிபொருளை கொண்டு இப்ப ஓடுது! அப்படி கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், நாஃப்தா, அப்படின்னு எல்லா சுத்திகரிகப்பட்ட எண்ணெய்கள் பல விதமா உபயோகப்படுது, இதிலேருந்து தான் அப்புறம் பெட்ரோகெமிக்கல்ஸ்லருந்து பல மூலப்பொருட்களை எடுத்து, நம் வாழ்க்கையிலே அன்றாடம் உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் சாமான்கள், பாலியெஸ்டர் சட்டை துணிமணிகள்னு நிறைய பொருட்கள் உற்பத்தி ஆகிறது! ஆக இதுக்கு எல்லாம் மூலம் நான் சொன்ன அந்த புதையுண்ட எரி பொருள் தான், சரி அது எப்படி தோண்றிச்சுன்னு பார்த்துட்டு, அப்பறமா இந்த சக்தி யின் பல அவதாரங்களை பிறகு தொடர் பதிவுகளா எழுதலாம்!

நான் சொன்ன இந்த புதையுண்ட எரி பொருள்கள் தோன்றினது பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னே. அதாவது உலகம் துவங்கின காலகட்டங்களை பல நிலைகளா பிரிக்கிறாங்க, அதை பத்தியும் அப்பறமா இந்த விக்கி பசங்க கிட்ட கத்துக்கங்க! அதன் காலகட்டங்கள், அதாவது 'Time sacle' ல ஒன்னு தான் 'Paleozoic Era'(இதை தமிழ்ல எப்படி சொல்றதுன்னு விக்கியாச்சு, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அதாவது பூமி தோன்றின பிறகு ஒரு 38 கோடி யிலருந்து 26 கோடி வருஷங்களுக்கு இடைப்பட்ட காலங்கள்ல முளைச்ச மரஞ்செடிகள் மடிஞ்சி,(அப்போதைய காடுகள் படம் கொஞ்சம பாருங்க!) மக்கி கீழே விழுந்து, அப்ப சதுப்பு நிலங்களா இருந்தது பூமியின் முக்காவாசி பகுதி, அப்படி இருந்த பகுதிகள்ல வளர்ந்த சின்ன சின்ன தாவரங்கள் மடிஞ்சி மக்கி போயி ஒரு ஸ்பாஞ்சு மாதிரி மிதந்து, அதுக்கு மேலே பலநூறு ஆண்டுகளா, மண்ணு, களிமண்ணு, அப்பறம் கனிமபொருட்களால இருகி போயி கடைசியிலே பூமிக்கு அடியிலே போயி மேலே விழுந்த பாறை, மணல்,களிமண், கனிமம் அப்படின்னு இந்த பொருட்களின் அழுத்ததாலே அந்த ஸ்பாஞ்சு மாதிரி இருந்த அந்த மக்கின பொருள்ல இருந்து நீர் மேலே எடுத்துவரப்பட்டு அது அப்படியே இருகி நிலக்கரி பாறையாகவோ, இல்லை எண்ணை படிமங்களாகவோ உண்டாகி போச்சு, அதே மாதிரி இந்த எண்ணைய் தோன்றினதுக்கும் முக்காவாசி ஒரு கடல் தாவரத்தை சொல்றாங்க! அதுக்கு பேரு ஆங்கிலத்திலே 'Diatoms'னு ( தமிழ் பேரு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்!)அதாவது இந்த தாவரம் பார்க்க நம்ம விந்தணுக்கள் போல இருக்கும், இதுவும் பல கோடி வருடங்களுக்கு முன்னே முளைச்ச ஒரு தாவரம், அதனுடய சிறப்பு என்னான்னா,கடலுக்குள்ள முளைச்ச இருந்த இந்த தாவரம் நீர் விழும் சூரிய கதிர்கள்ல இருந்து சக்தியை எல்லாம் சேமிச்சு வச்சுக்கிச்சாம். அப்பறம் அது செத்து மடிஞ்சி கடலின் கீழ்மட்டத்திலே விழுந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மண்ணு, கல்லு, பாறைன்னு அதுமேல விழுந்து அப்படியே அடியிலே போய் அதுக்குள்ள இருந்த நீரை வெளியேத்திட்டு அது சேமிச்சு வச்ச சக்தியை உள்ளுக்குள்ளே வச்சிருந்து அப்பறம் அந்த எண்ணைய் படிமங்கள் ('sedimentation')ஆகி போய்டுச்சுன்னு சொல்றாங்க, அப்பறம் பூமியின் சுழற்சியிலே ஏற்பட்ட அழுத்தத்தாலே, அப்ப தண்ணியா இருந்த பகுதி நிலப்பரப்பாவும், நிலப்பரப்பா இருந்த பகுதி நீர் பரப்பாவும் ஆயிடுச்சு, அப்படி தான் இப்ப நிலத்தை தோண்டுனா எண்ணெய் கிடைக்குதுன்னு சொல்றாங்க! ஆக இந்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஒரு காலத்திலே கடல் பகுதி, இப்ப பாலைவனமா இருக்கு! அது மாதிரி வட அமெரிக்காவின் வடக்கு பகுதியா இருக்கும் இந்த ஆல்பர்ட்டா என்ற மகாணம் ஒரு காலத்திலே கடலுக்கு அடியிலே இருந்த ஒன்னு (அது தான் இங்க ஏகப்பட்ட எண்ணைய் மணல் வளம் இருக்கு, அந்த கதை அப்பறமா சொல்றேன்!)!

இப்ப புரிஞ்சிச்சா இந்த புதையுண்ட எரி பொருள் தோண்றின சங்கதி, ஆக இது கிடைக்கதேன்னு, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா கொண்டு போக போகுதுன்னு நம்ம பாட்டுக்கு எடுத்து இரைச்சு உபயோக படுத்திக்கிட்டிருக்கோம், அதனாலே சொகுசா நம்ம வாழ்க்கை இப்ப போய்கிட்டிருக்கு, அப்படி வாழும் வாழ்க்கையால, அதாவது இந்த எரி பொருளை எரிச்சு சக்தியை நம்ம பிரயோகபடுத்திறதாலே வரும் விளைவா இந்த பூமியின் வெப்பம் அதிகமாச்சுன்னு கத்திக்கிட்டு, அதுக்கு மாத்து வழி என்னான்னு இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்கோம். ஆக இது தான் அந்த புதையுண்ட எரி பொருள் கதை, மேற்கொண்டு மற்ற (ஆதி பரா)சக்திகளை பற்றி அப்பறமா தெரிஞ்சிக்கலாம், இப்ப இவ்வளவு தான் பாடம்!

3 comments:

said...

நல்ல தகவல்கள். பதிவுக்கு நன்றி, வெளிகண்டநாதர்.

said...

இலவச கொத்தனார், வெளிகண்டநாதர் என்ற பெயரெல்லாம் காமிக்கலாக இருந்தாலும் எழுதும் விஷயங்கள் நன்றாகவெ இருக்கின்றன. நீங்கள் எழுதிவரும் பதிவுகளை படித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். தெள்ளு தமிழில் நகைச்சுவையோடு எழுதியதை படிக்கும்போது எளிதில் விளங்குகிறது. நான் ஆங்கில நூல்கள் படிபதில்லை.

இலவசக் கொத்தனாரே, எனது சிறுகதைகளை மீண்டும் பதிவு செய்து வருகிறேன். புதிய வலை நண்பர்களை எனது வலைபூவிற்க்கு அழைத்து செல்லவே அவ்வாறு செய்கிறேன். ஏற்கனவே நீங்கள் அவைகளை படித்திருந்தால் விட்டு விடுங்கள்.

இந்த உலகம் சில சுயநலக்காரர்களால் அழிந்து போய், மனித குலத்தை காப்பாற்ற ஒரு சில மனிதக் கூட்டம் படும் சிரமங்களை ஒரு சிறுகதையாக எழுத முயற்ச்சிகள் எடுத்து வருகிறேன்.

அடுத்த வாரம் குங்குமத்தில் எனது புதிய சிறுகதை வெளியாகலாம்.

மெலட்டூர்.இரா. நடராஜன்.

said...

நண்பர் இரவி சொன்னது

பயனுள்ள பதிவு. நன்றி.